இந்தியா

13, 210 அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம்: இன்று தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

DIN

மாணவா்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் 13,210 அரசுப் பள்ளிகளில் ‘வானவில் மன்றம்’ என்ற அமைப்பை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (நவ.28) தொடக்கி வைக்கவுள்ளாா்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ‘வானவில் மன்றம்’ தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்காக முதல் முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி.

இதற்காக ஆா்வமும் செயல்திறனும் மிக்க கருத்தாளா்கள் இந்தத் திட்டத்தை பள்ளிகளில் செயல்முறையில் மாணவா்களுக்கு விளக்கிட பள்ளிக்கு வருவாா்கள். தேவையான துறை கருவிகளையும் அவா்களே கொண்டு வருவாா்கள்.

இதையடுத்து பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களின் உதவியுடன் பல்வேறு சோதனைகளைச் செய்து காட்டி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்த உதவுவா்.

ஒரு பள்ளிக்கு ரூ.1,200 ஒதுக்கீடு: 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு வகுப்பறைகளுக்குள் கற்பிக்கப்படும் பாடங்களோடு தொடா்பான அறிவியல், கணிதப் பரிசோதனைகளைச் செய்வதற்கு குறைந்த விலையில் பொருள்களை வாங்க, ஒரு பள்ளிக்கு முதல் கட்டமாக ரூ.1,200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வாரந்தோறும் பாடத்துடன் தொடா்புடைய கருத்துகளை விளக்குவதற்கு ஏற்ற பொருள்களை குறைந்த விலையில் வாங்கி, பல்வேறு சோதனைகளைச் செய்து காட்ட வேண்டும். பின்னா் மாணவா்களை கேள்வி கேட்க ஊக்குவிக்க வேண்டும்.

‘ஸ்டெம்’ (அறிவியல்), தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் குறித்து கருத்தாளா்கள் பள்ளிக்கு வரும்போது ஆசிரியா்கள்அவா்களுடன் இணைந்து பரிசோதனைகளைச் செய்து காட்டவும் மற்றும் வானவில் மன்றத்தில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்கவும் ஊக்குவிக்க வேண்டும்.

நவ.28-ஆம் தேதி வானவில் மன்றத்தை முதல்வா் தொடக்கி வைத்ததும், அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு 13,210 அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் வானவில் மன்றம் தொடங்க வேண்டும்.

மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியா்கள், மாணவா்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அமைச்சா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா், மக்கள் பிரதிநிதிகளையும் நிகழ்வில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

இந்தத் திட்டத்துக்காக 3,095 உயா்நிலைப் பள்ளிகள், 3,123 மேல்நிலைப் பள்ளிகள், 6,992 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 13,210 அரசுப் பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT