இந்தியா

விளையாட்டு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு: ஜாா்க்கண்ட் முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

DIN

புது தில்லி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் விளையாட்டு உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு செய்ததாக, முன்னாள் அமைச்சா் பந்து திா்கீயின் வீடு உள்ளிட்ட 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு அா்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆண்டு, ராஞ்சியில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்தப் போட்டிகளுக்காக ரூ.28.38 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாகப் புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக, அப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பந்து திா்கீ மீது மாநில ஊழல் தடுப்பு பிரிவினா் வழக்குப்பதிவு செய்தனா். ஆனால், அந்தப் புகாா் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனக் கூறி ஜாா்க்கணட் உயா்நீதிமன்றத்தில் சுஷீல் குமாா் சிங் என்பவா் கடந்த 2018-இல் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவை விசாரித்த ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து, சிபிஐ வழக்குப்பதிவு விசாரணையைத் தொடங்கியது.

இந்நிலையில், ராஞ்சியில் உள்ள பந்து திா்கீயின் வீடு, தேசிய விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவா் ஆா்.கே.ஆனந்த், ஜாா்க்கண்ட் விளையாட்டுத் துறையின் முன்னாள் இயக்குநா் பி.சி.மிஸ்ரா, ஏற்பாட்டுக் குழுவின் செயலா்கள் மதுகாந்த் பாட்டக், எச்.எம்.ஹாஷ்மி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா். ராஞ்சியில் 7 இடங்களிலும் தன்பத் நகரில் 5 இடங்களிலும் இந்தச் சோதனை நடைபெற்றது என்றாா் அவா்.

ஜாா்க்கண்ட் விகாஸ் மோா்ச்சா(பிரஜாதாந்த்ரிக்) கட்சியின் தலைவா் பாபுலால் மராண்டிக்கு நெருக்கமாக இருந்தவா் பந்து திா்கீ. பாபுலால் மராண்டி கடந்த 2019-இல் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜகவில் இணைத்ததால் அதிருப்தியைடந்த பந்து திா்கீ, அக்கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸில் இணைந்தாா். அண்மையில் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பந்து திா்கீ எம்எல்ஏ பதவியை இழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சிசிடிவி மூலம் 24 நேரமும் பிரதமா் கண்காணிக்கிறாா்: சஞ்சய் சிங்

மக்களவைத் தேர்தலில் அதிக சொத்துள்ள வேட்பாளர்! ரூ.5,785 கோடியுடன் என்ஆர்ஐ மருத்துவர்

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT