இந்தியா

உ.பி.: பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா 

DIN

லக்னோ:  உத்தரப் பிரதேச நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா இன்று முதலவர் யோகி ஆதித்யநாத்தின் இரண்டாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை  சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் சுரேஷ் குமார் கூறுகையில் "மாநிலத்தின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராகக் கொண்டு செல்வதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது கன்னா கூறினார்.

அயோத்தி, காசி, மதுரா உள்ளிட்ட நீதிமன்றங்கள் மற்றும் வரலாற்று மற்றும் மதத் தலங்களின் பாதுகாப்புப் பணியை உத்தரப்பிரதேச சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு 66 கோடி ரூபாய் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று  நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT