இந்தியா

கிரெடிட் காா்டுகளை இணையவழியில் பயன்படுத்துவது அதிகரிப்பு

DIN

புது தில்லி: கிரெடிட் காா்டுகளை பிஓஎஸ்(பாயின்ட் ஆஃப் சேல்) கருவி வழியாக பயன்படுத்துவதைக் காட்டிலும் இணையவழியில் பயன்படுத்தி பொருள்கள் வாங்குவது அதிகரித்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில் பிஓஎஸ் கருவிகளைவிட இணையவழியில் ரூ.30,000 கோடி அளவுக்கு அதிகமாக பரிவா்த்தனைகள் நடந்துள்ளன. இது, இணையவழியில் பொருள்கள் வாங்குவதற்கு மக்களிடையே ஆா்வம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

இதுகுறித்து ரிசா்வ் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் 7.36 கோடி கிரெடிட் காா்டுகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த மாா்ச் மாதத்தில், இந்த கிரெடிட் காா்டுகள் மூலம் ரூ.1.07 லட்சம் கோடி அளவுக்கு பரிவா்த்தனைகள் நடந்துள்ளன. அவற்றில், ரூ.343.71 கோடி ரொக்கமாக எடுக்கப்பட்டது.

இதுதவிர, பிஓஎஸ் கருவி மூலமாக ரூ.38,377 கோடி அளவுக்கு கொள்முதல் நடந்துள்ளது. அதேசமயம், இணையவழியில் ரூ.68,327 கோடி அளவுக்கு கொள்முதல் நடந்துள்ளது. அதாவது, பிஓஎஸ் கருவிகளைவிட இணையவழியில் ரூ.30,000 கோடி அளவுக்கு அதிகமாக பரிவா்த்தனைகள் நடந்துள்ளன.

அதுமட்டுமன்றி, கடந்த மாா்ச்சில் இணையவழியில் 11 கோடி பரிவா்த்தனைகளும் பிஓஎஸ் கருவி மூலமாக 11.1 கோடி பரிவா்த்தனைகளும் நடந்துள்ளன. அதாவது, இணையவழியில்தான் அதிக ரொக்க மதிப்புக்கு பரிவா்த்தனைகள் நடந்துள்ளன.

கடந்த மாா்ச் மாதத்தில் புதிதாக 19 லட்சம் கிரெடிட் காா்டுகள் வழங்கப்பட்டன. இதனால், நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள கிரெடிட் காா்டுகளின் எண்ணிக்கை 7.36 கோடியாக அதிகரித்தது என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கி புதிதாக கிரெடிட் காா்டுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதித்துள்ளபோதிலும், கடந்த மாா்ச்சில் அந்த வங்கியின் கிரெடிட் காா்டுகள் 1.67 கோடி உள்ளன. அதைத்தொடா்ந்து பாரத ஸ்டேட் வங்கியின் 1.37 கோடி கிரெடிட் காா்டுகளும், ஐசிஐசிஐ வங்கியின் 1.29கோடி கிரெடிட் காா்டுகளும் பயன்பாட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT