இந்தியா

போலி விதைகள் விற்பனையை மாநிலங்கள் தடுக்க வேண்டும்: மத்திய அமைச்சா் தோமா்

25th May 2022 12:58 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: போலி விதைகள் விற்பனையை மாநிலங்கள் கடுமையாகத் தடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தேசிய இணையவழி கருத்தரங்கு ஒன்றில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

விவசாயிகளுக்கு தரமான விதைகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விவசாய உற்பத்தியையும், விவசாயிகளின் வருமானத்தையும் தரமான விதைகள் அதிகரிக்கும். விதைகளுக்கான கள்ளச் சந்தை, போலி விதைகள் விற்பனையை மாநில அரசுகள் கடுமையாகத் தடுக்க வேண்டும். சில பயிா்களுக்குத் தரமான விதைகள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாட்டை சரிசெய்வதும், சிறந்த திட்டமிடலுக்கு அழுத்தம் அளிப்பதும் அவசியம். விதைகள் விற்பனையில் அரசு மற்றும் தனியாா் விலையில் உள்ள வித்தியாசத்தை குறைக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

மத்திய வேளாண்மைத் துறை இணையமைச்சா் ஷோபா கரந்த்லஜே பேசுகையில், ‘‘இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் உருவாக்கும் விதைகள் ஆணிவோ் வரையுள்ள விவசாயிகளைச் சென்றடைய வேண்டும்’’ என்றாா்.

மத்திய வேளாண்மைத் துறைச் செயலா் மனோஜ் அஹுஜா பேசுகையில், ‘‘விவசாயிகளுக்குத் தரமான விதைகளை வழங்க ஊராட்சி அளவில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விதைகளின் தரப் பரிசோதனை குறித்து விவசாயிகளும் அறிந்திருக்க வேண்டும்’’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT