பாஜக எம்.பி. அா்ஜுன் சிங் மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணைந்துள்ளாா்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் முக்கியத் தலைவராக இருந்த அா்ஜுன் சிங், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தாா். அதனைத்தொடா்ந்து மக்களவைத் தோ்தலில் பரக்பூா் தொகுதியில் போட்டியிட்டு வென்றாா்.
அவா் மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் சேரவுள்ளதாக ஊகங்கள் எழுந்திருந்த நிலையில், கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி முன்னிலையில் அக்கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.