இந்தியா

மே 23-ல் ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி

DIN

ஜப்பான் பிரதம்ர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி வரும் 23, 24ஆம் தேதிகளில் ஜப்பான் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 

ஜப்பான் செல்லும் அவர் 24ஆம் தேதி நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். தொடர்ந்து அமெரிக்க அதிபர், ஜப்பான், ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் மோடி பேசுகிறார். அங்கு வசிக்கும இந்தியர்களையும் சந்திக்கும் பிரதமர் மோடி, ஜப்பான் நிறுவனங்களின் தலைவர்களுடனும் கலந்துரையாடுகிறார். 

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலாக குவாட் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடந்தது. இதில், பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கான குவாட் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT