இந்தியா

தையல்காரர் படுகொலை: உதய்பூரில் கண்டனப் பேரணி

DIN

தையல்காரர் கன்னையா லாலின் கொடூரமான கொலைக்கு எதிராக உதய்பூரில் நடைபெற்ற கண்டனப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

ராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரர் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில் விடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. படுகொலையில் தொடர்புடைய கௌஸ் மொஹம்மது மற்றும் ரியாஸ் ஜப்பர் ஆகிய இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்து அமைப்புகள் சார்பில் சர்வ ஹிந்து சமாஜ் பேரணி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் டவுன்ஹால் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை அமைதியாக நடைபெற்றது. 

பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஊர்வலம் செல்லும் வழியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதாகவும் கூடுதல் துணை ஆணையர் எம்.என்.தினேஷ் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT