இந்தியா

மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே

DIN

மகாராஷ்டிர மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் சிவசேனை ஆட்சி அமையவிருக்கிறது. இந்த அரசுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸும், சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

அவரைத் தொடர்ந்து பாஜக தலைவரான தேவேந்திர ஃபட்னவிஸ் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT