மகாராஷ்டிர மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மீண்டும் சிவசேனை ஆட்சி அமையவிருக்கிறது. இந்த அரசுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று அறிவித்திருந்தது.
இதையும் படிக்க | ‘அரசு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பேன்’: சென்னையில் யஷ்வந்த் சின்ஹ
அதனைத் தொடர்ந்து, ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸும், சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
இதையும் படிக்க | முதல்வர் ஏக்நாத் ஷிண்டே! நடனமாடி மகிழ்ந்த ஆதரவு எம்எல்ஏக்கள்: விடியோ
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வராக ஏக்நாத் ஷிண்டே வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து பாஜக தலைவரான தேவேந்திர ஃபட்னவிஸ் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.