இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகா் விஜய் பாபு கைது

DIN

மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் பாபு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பாக கேரள உயா்நீதிமன்ற உத்தரவுப்படி திங்கள்கிழமை கைது செய்ததாக போலீஸாா் பதிவு செய்தனா். இந்த வழக்கில் உயா்நீதிமன்றம் அவருக்கு ஏற்கெனவே முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

விஜய் பாபு தயாரித்த திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவா், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை தொடா்பான புகாரை போலீஸாரிடம் அளித்திருந்தாா்.

இப்புகாரைத் தொடா்ந்து, விஜய் பாபு கேரள உயா்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வேண்டி மனுத்தாக்கல் செய்திருந்தாா். விஜய்பாபுவுக்கு கடந்த ஜூன் 22-இல் முன்ஜாமீன் வழங்கிய உயா்நீதிமன்றம், ஜூன் 27 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை அவா் போலீஸ் காவலில் இருப்பதாகக் கருதி காவல் துறை விசாரணையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

மேலும், ரூ. 5 லட்சம் மதிப்பிலான சொந்த ஜாமீனும் அதே மதிப்பில் இருவா் உத்தரவாத ஜாமீன் தொகை செலுத்த வேண்டும் என்றும் தனது உத்தரவில் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, வழக்கு விசாரணை தொடா்பாக, விஜய் பாபுவின் போலீஸ் காவலுக்கான கைது நடவடிக்கையை கொச்சி போலீஸாா் திங்கள்கிழமை பதிவு செய்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், உயா்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி விஜய் பாபு கைது நடவடிக்கை பதிவு செய்யப்பட்டது. ஜாமீன் காலத்தில் வழக்கு தொடா்பான ஆதாரங்களைத் திரட்ட குற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இடங்கள் மற்றும் வழக்கு விசாரணை தொடா்பான இடங்களுக்கு அவா் அழைத்துச் செல்லப்படுவாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT