இந்தியா

யஷ்வந்த் சின்ஹவுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு

DIN


புது தில்லி: குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹவை நிறுத்தியுள்ளனர்.

புது தில்லியில் இன்று தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், யஷ்வந்த் சின்ஹா இன்று காலை தனது வேட்புமனுவை அளித்தார்.

வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனர்.

ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது ஆதரவு யாருக்கென்று அறிவிக்காமல் இருந்த நிலையில், தெலங்கானா ராஷ்டிர சமிதி, யஷ்வந்த் சின்ஹவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவர் கே.டி. ராமா ராவ் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,

“தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ், குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹவுக்கு ஆதரவளிப்பதாக முடிவெடுத்துள்ளார். தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த எம்.பி.க்களுடன் இன்றைய வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அறிவிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT