புது தில்லி: குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
புது தில்லியில் இன்று தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், யஷ்வந்த் சின்ஹா தனது வேட்புமனுவை அளித்தார்.
வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோா் உடனிருந்தனர்.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகளின் கணக்கு
வேட்புமனு இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனது பிரசாரத்தை ஜூன் 28-ஆம் தேதி முதல் யஷ்வந்த் சின்ஹா தொடங்கவிருக்கிறார். சென்னையிலிருந்து அவா் பிரசாரத்தைத் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பழங்குடியினத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு அறிவிக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.