இந்தியா

அமித்ஷாவின் பேட்டியைத் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் கைது

DIN

வெளிநாட்டு நிதி தொடர்பான வழக்கில் சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டை குஜராத் காவல்துறை கைது செய்துள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் இன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியான நேர்காணலில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆதாரமற்ற செய்திகளை சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டின் என்ஜிஓ அமைப்பு வெளியிட்டதாக தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் தீஸ்தா செதல்வாட்டின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டை குஜராத் காவல்துறை கைது செய்துள்ளது. வெளிநாட்டு நிதியை பெற்றதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த காவலர்கள் அவரைத் தாக்கியதாகத் தெரிவித்த தீஸ்தாவின் வழக்கறிஞர் அவர் சாண்டா குரூஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அகமதாபாத் கொண்டு செல்லப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவின் நேர்காணலுக்குப் பின் தீஸ்தா செதல்வாட் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT