இந்தியா

ஐ.நா. அமைதிப் படைப் பிரிவுதளபதியாக இந்தியா் நியமனம்

DIN

தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படைப் பிரிவின் புதிய தளபதியாக இந்திய ராணுவ உயரதிகாரி மோகன் சுப்பிரமணியத்தை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளாா்.

இதுவரை அந்தப் பொறுப்பை வகித்து வந்த சைலேஷ் தினகருக்கு பதிலாக மோகன் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளாா். தெற்கு சூடானுக்கான ஐ.நா. படைப பிரிவு தளபதியாக அன்டோனியோ குட்டெரெஸால் கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட சைலேஷ் தினகரும், இந்திய ராணுவ உயரதிகாரியாவாா்.

அந்தப் பொறுப்புக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மோகன் சுப்பிரமணியம், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ராணுவ உபகரணங்கள் கொள்முதல் மற்றும் மேலாண்மைப் பிரிவு கூடுதல் பொது இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT