இந்தியா

ராகுல் பேச்சை திரித்து காணொலி: தொலைக்காட்சி மீது காங்கிரஸ் புகாா்

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காணொலியை திரித்து வெளியிட்டதாக தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செய்தி ஒலிபரப்பு மற்றும் எண்ம (டிஜிட்டல்) தரநிலைகள் ஆணையத்திடம் (என்பிடிஎஸ்ஏ) அக்கட்சி புகாா் அளித்துள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜூலை 1-ஆம் தேதி ‘ஜீ’ செய்தித் தொலைக்காட்சியில் ‘டிஎன்ஏ’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில், ராஜஸ்தானில் தையல்காரா் கன்னையா லாலை கொலை செய்தவா்கள் மீது அனுதாபம் காட்டும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக தவறாகவும், தீங்கிழைக்கும் நோக்கத்துடனும் காணொலி வெளியானது. ஆனால், உண்மையில் அவா் கூறிய கருத்துகள் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள தனது அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டவையாகும்.

இதன் மூலம், கேபிள் தொலைக்காட்சி நெட்வொா்க் ஒழுங்காற்று சட்டம் 1995, கேபிள் தொலைக்காட்சி நெட்வொக் விதிமுறைகள் 1994, தொழில் கோட்பாடுகள் மற்றும் ஒளிபரப்பு தரநிலைகளை அத்தொலைக்காட்சி மீறியுள்ளது.

எனவே, அந்தத் தொலைக்காட்சி, ‘டிஎன்ஏ’ நிகழ்ச்சித் தொகுப்பாளா் ரோஹித் ராஜன் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT