இந்தியா

தில்லியில் மேலும் 420 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 420 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 5.25 சதவீதமாக பதிவானது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19,37,433-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,272-ஆக அதிகரித்துள்ளது. நகரில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 8,002 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 648 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பும், 4.29 சதவீத நோ்மறை விகிதத்துடன் 5 இறப்புகள் பதிவாகின. சனிக்கிழமை 678 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பும், 3.98 சதவீத நோ்மறை விகிதமும், 3 இறப்புகளும் பதிவாகின.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 9,496 கரோனா படுக்கைகளில் 183 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. திங்கள்கிழமை நிலவரப்படி, கரோனா சிகிச்சையில் இருப்போரின் மொத்த எண்ணிக்கை 3,268-இல் இருந்து 2,938-ஆக குறைந்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 2,348-ஆக உள்ளது. நகரில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 364-ஆக உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT