இந்தியா

இந்தியத் தூதரகத்தில் காவலாளி தற்கொலை

DIN

காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் காவலாளி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்டை சார்ந்த காவலாளி இந்தியத் தூதரக வளாகத்தினுள் ஞாயிற்றுக்  கிழமை இரவு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இது திங்கட்கிழமை காலையில்தான் இந்தியத் தூதரகத்திற்கு தெரியவந்துள்ளது. 

“தற்கொலை தகவல் கிடைத்த உடனே நாங்கள் நேபால் காவல் துறையினரிடம் தெரிவித்தோம்” என தூதரக அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

இறந்த நபர் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டு வந்திருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான விசாரணை நடைப்பெற்று வருகிறது. 

ஏற்கனவே 2005ஆம் ஆண்டு சிஐஎஸஃப் வீரர்கள் இந்தியத் தூதரக வளாகத்தினில் சுட்டுக் கொண்டனர். அதில் ஒருவர் இறந்து விட்டார். இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT