இந்தியா

இதை ஏன் அன்றே செய்யவில்லை? பாஜகவிற்கு உத்தவ் தாக்கரே கேள்வி

DIN

சிவசேனை கட்சியைச் சேர்ந்தவரை முதல்வராக நியமிப்பதற்கு 2019ஆம் ஆண்டே ஏன் ஒப்புக் கொள்ளவில்லை என மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பாஜகவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வராக சிவசேனை கட்சியின் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுள்ள நிலையில் துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னவிஸ் பொறுப்பேற்றுள்ளார். 

இந்நிலையில் இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய சிவசேனை கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, “2019ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் பாஜக அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தாலே இத்தகைய சூழல் ஏற்பட்டிருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

சிவசேனை கட்சியைச் சேர்ந்தவரை 2.5 ஆண்டுகள் முதல்வராக பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என அமித்ஷாவிடம் தெரிவித்தபோது அதற்கு சம்மதம் அளித்திருந்தால் சிவசேனை பாஜகவுடன் தொடர்ந்து பயணித்திருக்கும். அன்றைக்கு பாஜக தனது வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால் மகா விகாஸ் அகாதி கூட்டணி அமைந்திருக்காது" என உத்தவ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

சிவசேனையின் ஆட்சிக்கு எதிராக சொந்தக் கட்சியினரே நடத்திய கிளர்ச்சி ஜனநாயகம் ஏமாற்றிய செயல் எனக் குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே அவர்கள் மக்களின் வாக்குகளை பயனற்று செய்துவிட்டதாகவும் விமர்சனம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT