கேரளத்தில் ஒரேநாளில் 54,537 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54,537 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்கும் பிலிப்பின்ஸ்
மேலும் 30,225 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று 13 பேர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 52,786 ஆக உயர்ந்துள்ளது. 3,33,447 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.