இந்தியா

பிகாரில் தொடரும் சோகம்: கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் பலி

DIN

பிகாரின் பக்ஸர் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

அதன்படி, பக்ஸர் மாவட்டத்தில் உள்ள அன்சாரி கிராமத்தில் புதன்கிழமை மாலை 6 பேர் விஷ சாராயத்தை உட்கொண்டதாகவும், இரவு 10 மணியளவில் அவர்களின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

அவர்களில் சிலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் சுக்கு முஷார் (60), ஷிவ் மோகன் யாதவ் (55), பிருக் சிங் (48), மின்கு சிங் (35) ஆனந்த் குமார் (30) மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆவார். 

மேலும், பண்டி சிங், முன்னா சவுத்ரி, சஞ்சய் சௌத்ரி மற்றும் ஒருவர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறப்பிற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிய உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக சதார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேளூரில் பாதுகாப்பான தாய்மை தினம்

பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி சங்ககிரியில் ஊா்வலம்

SCROLL FOR NEXT