இந்தியா

காங்கிரஸ் வேட்பாளர்களுடன் அமிருதசரஸ் பொற்கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமிருதசரஸ் பொற்கோயிலில் வழிபாடு செய்தார். 

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் பிப். 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சாா்பில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 86 தொகுதிகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஒரு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் சென்றுள்ளார். தில்லியிலிருந்து வியாழக்கிழமை காலை அமிருதசரஸ் வந்த ராகுல் காந்தி, மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் அமிருதசரஸ் பொற்கோயிலில் வழிபாடு செய்தார். 

இதையடுத்து, ஜலந்தா் செல்லும் ராகுல் காந்தி, இன்று மாலை காணொலி மூலமாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT