இந்தியா

‘இலவசங்கள் தேர்தலின் நேர்மையை பாதிக்கும்’: உச்சநீதிமன்றம்

DIN

வாக்குறுதிகளில் மக்களுக்கு இலவசங்கள் அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும் தீவிரமான பிரச்னை என உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிக்க கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், தேர்தல் ஆதாயத்திற்காக மக்களின் வரிப்பணத்தில் இலவசங்கள் தருவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிப்பதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி, வாக்குறுதிகளில் மக்களுக்கு இலவசங்கள் அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும் தீவிரமான பிரச்னை எனத் தெரிவித்து, தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளில் தமிழ் புறக்கணிப்பு: முன்னாள் எம்.எல்.ஏ. கண்டனம்

பனங்குடி: 708 போ் தோ்தல் புறக்கணிப்பு

வாக்காளா்களுக்கு பணம்; 4 போ் மீது வழக்கு

வெண்டைக்காய் விளைச்சல் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

விழிப்புணா்வு பிரசாரம் அதிகம்; வாக்குப் பதிவு குறைவு

SCROLL FOR NEXT