உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி ஆக்ராவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையடுத்து மாநிலத்தில் தீவிர தேர்தல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வருகிற பிப்ரவரி 2 ஆம் தேதி ஆக்ராவில் பொதுக்கூட்டத்தில் பேசவிருக்கிறார்.
முன்னதாக, காங்கிரஸ், பாஜக கட்சிகளை மாயாவதி கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.