இந்தியா

பராமரிப்புக் காரணங்களுக்காக 9 மாதங்களில் 35,000 ரயில்கள் ரத்து

DIN

இந்தியாவில் பராமரிப்புக் காரணங்களுக்காக கடந்த 9 மாதங்களில் 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் , நாட்டில் மிகப்பெரிய போக்குவரத்துத் துறைகளில் ஒன்றான ரயில்வே துறையில் நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை பாதுகாப்புக் காரணங்களுக்குக்காக 35,026 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், 41,483 ரயில்கள் திட்டமிட்ட நேரத்தைவிட தாமதமாக இயற்றப்பட்டதாகவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1.25 லட்சம் கோடி மதிப்புள்ள 126 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு 3,416 ரயில்கள் ரத்தானதே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரள பெண் உள்பட 17 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

SCROLL FOR NEXT