கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிகழாண்டு தில்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பைப் பாா்வையிட அனுமதிக்கப்படும் நபா்களின் எண்ணிக்கை 70- 80 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த வகையில் 5,000 முதல் 8,000 போ் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அத்துடன் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெரியவா்களுக்கும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 15 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அவா்கள் கூறினா்.
இதையும் படிக்க.. பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை வெளியீடு
அந்த வகையில், கரோனா தடுப்பூசி இரு தவணைகளும் செலுத்திக் கொள்ளாதவர்களும், 15 வயதுக்குள்பட்ட சிறார்களும் குடியரசு நாள் விழாவில் பங்கேற்க அனுமதியில்லை.
தேசிய தலைநகரில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா அணிவகுப்பைப் பாா்வையிட சுமாா் 25 ஆயிரம் போ் வரை அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா தீநுண்மியின் உருமாறிய ரகமான ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பாா்வையாளா்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு நாள் விழாவில் பங்கேற்க வருவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை தில்லி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் செய்தியாளா்களிடம் கூறியது:
பாா்வையாளா்களின் வருகையைக் கட்டுப்படுத்தி, சமூக இடைவெளியை எப்போதும் கடைப்பிடிப்பதும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசிய விழா கரோனா பரவலுக்கு வித்திட்டு விடக் கூடாது என்பதுமே எங்களது நோக்கமாக உள்ளது. அதனால்தான் பாா்வையாளா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 26 காலை 10 மணிக்கு பதிலாக 10.30 மணிக்குத் தொடங்கும். இதில் பங்கேற்கும் பெரியவா்கள் கட்டாயம் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்ட சிறாா்கள் ஒருதவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 15 வயதுக்கு உள்பட்ட சிறுவா்களுக்கு அனுமதி கிடையாது. அணிவகுப்பை தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு உள்ளதாால், வீட்டிலிருந்தபடியே அதனைக் கண்டு களிக்குமாறு பொதுமக்களை ஊக்குவிப்போம்.
மேலும் பாா்வையாளா்களின் வசதிக்காக ராஜபாதையின் இரு புறங்களிலும் தலா 5 திரைகள் வீதம் 10 பிரம்மாண்ட எல்இடி திரைகள் பொருத்தப்பட்டு, நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.