இந்தியா

உறைபனியில் புதைந்த சிறுவனின் சடலம் மீட்பு

DIN

ஜம்மு: ஜம்மு} காஷ்மீர், கிஷ்துவார் மாவட்டத்தில் உறைபனியில் உயிருடன் புதைந்த 7 வயது சிறுவனின் சடலத்தை போலீஸôர் மீட்டனர்.
இதுதொடர்பாக காவல் துணை ஆணையர் அசோக் குமார் சர்மா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
கிஷ்துவார் மாவட்டம், திலார் கிராமம், மத்வா பகுதியில் வசிப்பவர் பஷீர் அகமது. இவரது 7 வயது மகன் முத்தாரீஃப் பஷீர்.  தற்போது அப்பகுதியில் உறைபனி அதிகம் நிலவி வருகிறது. இந்நிலையில், சிறுவன் முத்தாரீஃப் பஷீர் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அதன்பிறகு அவரைக் காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் காவல் 
நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸôர் அவரது வீட்டருகே சோதனை நடத்தியபோது சிறுவனின் வீட்டு மேற்கூரை பனியால் பெயர்ந்து விழுந்து வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்ததும், அதில் சிறுவன் உறைபனியில் உயிருடன் புதைந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. 
இதையடுத்து பனிக்குள் சிக்கிய சிறுவனின் சடலத்தை போலீஸôர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT