பிரதமர் மோயின் தாயார் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடிதம் எழுதியுள்ளார்.
ஹிராபென்(100) புதன்கிழமை காலை உடல்நலப் பிரச்னைகளால் அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருவதாகவும் மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய் தெரிவித்துள்ளார்.
படிக்க: வார்த்தையை சரியாக உச்சரிக்காதது குற்றமா? 5 வயது சிறுமியின் கையை முறித்த ஆசிரியர்!
பவார் எழுதிய கடிதத்தில்,
உங்கள் அன்பான தாயுடன் எவ்வளவு நெருக்கமான பிணைப்பு இருக்கிறது என்பதை நான் அறிவேன். இந்த கடினமான கட்டத்தைப் புரிந்துகொள்வதாகவும் அவர் கூறினார்.
அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன் என்று கடிதம் எழுதியுள்ளார்.