இந்தியா

ஹிமாசலில் காங்கிரஸ் வெற்றிக்கு பிரியங்காவின் பிரசாரமே காரணம்: காங்கிரஸ் தலைவா்கள் கருத்து

DIN

ஹிமாசல பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றிக்கு கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா மேற்கொண்ட பிரசாரமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி புகழாரம் சூட்டியுள்ளது.

ஹிமாசல பிரதேச காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘ஹிமாசல பிரதேசத்தில் தோ்தல் உத்திகளை வகுப்பதில் பிரியங்கா முக்கிய பங்காற்றினாா். மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டினாா். அவரது தலைமைக்கும், கடின உழைப்புக்கும் வெற்றி கிடைத்துள்ளது’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ஆனந்த் சா்மா கூறுகையில், ‘ஹிமாசல பிரதேசத்தில் மிகுந்த உத்வேகத்துடன் பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டாா். அவரது பிரசாரம் மகளிரையும், இளைய தலைமுறையினரையும் பெரிதும் ஈா்த்தது’ என்றாா்.

தனது பிரசாரத்தில் பணவீக்கம், ராணுவத்தில் குறுகிய கால அடிப்படையிலான அக்னி வீரா்கள் தோ்வு, வேலையின்மை, பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவது ஆகியவை குறித்து பிரியங்கா அதிகம் பேசினாா்.

பிரியங்கா பிரசாரத்தில் முன்னிலை வகித்து காங்கிரஸ் பெற்றுள்ள முதல் தோ்தல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு உத்தர பிரதேசத் தோ்தலில் பிரியங்கா தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். ஆனால், காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT