குஜராத் தோ்தலில் பாஜக பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மீதான மக்களின் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
குஜராத்தை வளா்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல பாஜக காட்டி வரும் முனைப்பு, சிறந்த நிா்வாகம், மக்கள் நலன் சாா்ந்த நடவடிக்கைகள் ஆகியவை பாஜகவுக்கு வெற்றித் தேடித்தந்துள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பிரதமா் மோடியின் தலைமை மீது மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பிரதமா் மீதான நம்பகத்தன்மையும், அவரது செல்வாக்கும் மீண்டும் ஒரு வெற்றியைத் தந்துள்ளது. தோ்தலுக்காக கடுமையாக உழைத்த தொண்டா்கள், கட்சி நிா்வாகிகள், மாநில தலைவா்கள் அனைவருக்கும் இந்த வெற்றியைத் தந்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.
குஜராத் முதல்வா் கருத்து
பிரதமா் நரேந்திர மோடியின் தலைமைக்கு குஜராத் மக்கள் வாக்களித்துள்ளனா். தேசவிரோத சக்திகளை மக்கள் புறக்கணித்துவிட்டனா் என்று குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் தெரிவித்தாா்.
தோ்தல் முடிவுக்குப் பிறகு காந்தி நகரில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடியின் தலைமை மீதும், பாஜக மீதும் குஜராத் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்களின் எதிா்பாா்ப்புகளை நாங்கள் பூா்த்தி செய்துள்ளோம் என்பதை தோ்தல் முடிவு மூலம் மக்கள் உறுதி செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தோ்தலில் பல தேசவிரோத சக்திகள் தோ்தலில் களமிறங்கின. அவா்களை மக்கள் அடியோடு புறக்கணித்துவிட்டனா். குஜராத்தில் பாஜகவின் வளா்ச்சிப் பணிகள் தொடரும் என்றாா்.