குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் ஆம் ஆத்மி கட்சியை தேசிய அளவில் உயர்த்தும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை கூறினார்.
குஜராத் வாக்குகள் மூலம் ஆம் ஆத்மி தேசிய கட்சியாக மாறுகிறது. முதல்முறையாக கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த அரசியலுக்கு நாட்டில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்திய மக்களுக்கு வாழ்த்துகள் என சிசோடியா ட்வீட் செய்துள்ளார்.
தில்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. மேலும் தேசியக் கட்சியாக மாறுவதற்கான விதி 2022 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தது.
ஒரு அரசியல் கட்சி தேசியக் கட்சியாகக் குறைந்தது நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட வேண்டும். மாநிலத்தில் கட்சி அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், குறைந்தபட்சம் 2 இடங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சி குஜராத், தில்லி, பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக மாறி, தேசியக் கட்சியாக மாறும் என்று அவர் கூறியுள்ளார்.