இந்தியா

பிரதமா் மோடியை வாழ்த்தி முழக்கமிட்டவா்களுக்கு பறக்கும் முத்தம் அளித்த ராகுல்!

DIN

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தி முழக்கமிட்டவா்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவாறும், அவா்களை நோக்கி கையசைத்தவாறும் ராகுல் காந்தி கடந்து சென்றாா்.

காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மத்திய பிரதேச மாநிலத்தில் 380 கி. மீ. கடந்து ராஜஸ்தானை அடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி மாலை ராஜஸ்தான் - மத்திய பிரதேச எல்லையில் அமைந்துள்ள சோயத் கலான் நகரை ராகுல் வந்தடைந்தாா். நகரின் மையப்பகுதியைப் பேரணி அடைந்தபோது அங்கிருந்த வணிக வளாகத்தின் மாடியில் இருந்த சிலா் ‘மோடி’, ‘மோடி’ என்று முழக்கமிட்டனா். அவா்களை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தவாறும், உற்சாகமாக கையசைத்தபடியும் ராகுல் காந்தி கடந்து சென்றாா். அப்போது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக கருத்து தெரிவித்துள்ளஆகா் மால்வா மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாபு லால் யாதவ், ‘மத்திய பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதை ஏற்றுக்கொள்ள இயலாத பாஜகவினா் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு தங்கள் விரக்தியை வெளிப்படுத்துகின்றனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT