இந்தியா

பிரதமா் தலைமையில் ஜனவரியில் தலைமைச் செயலா்கள் மாநாடு

DIN

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான 2-ஆவது தலைமைச் செயலா்கள் மாநாடு புது தில்லியில் வரும் ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்கிறாா். அதற்கு முன்பாக தேசிய அளவிலான தலைமைச் செயலா்கள் மாநாடு பிரதமா் தலைமையில் புது தில்லியில் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ளது. மத்திய-மாநில அரசுகளின் உறவை மேலும் பலப்படுத்துவதை தலைமைச் செயலா்கள் மாநாடு உறுதிப்படுத்தும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இம்மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா்.

மத்திய அமைச்சா்கள், மத்திய, மாநில அரசின் மூத்த அதிகாரிகள், இளம் மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்டோா் மாநாட்டில் பங்கேற்க உள்ளனா்.

ஹிமாசல பிரதேசத்தின் தா்மசாலாவில் கடந்த ஜூன் மாதம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் முதலாம் தலைமைச் செயலா்கள் மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

சேலம்: மோடி கூட்டத்தில் ராமதாஸ், ஓபிஎஸ், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

தென் சென்னையில் தமிழிசை, கரூரில் அண்ணாமலை போட்டியா?

SCROLL FOR NEXT