இந்தியா

தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதி மீது தீவிர கண்காணிப்பு: மத்திய அரசு முடிவு

DIN

அண்டை நாடுகளில் இருந்து இருந்து தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுவதை தீவிரமாக கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது; இதற்கான வழிமுறை விரைவில் உருவாக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், உள்நாட்டில் தொலைத்தொடா்புத் துறை உற்பத்தியை ஊக்குவிக்க 4 பிரத்யேக பணிக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

தொலைத்தொடா்புத் துறையில், மத்திய அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்துக்கு தகுதி பெற்ற 40 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அப்போது, சீனாவில் தயாரிக்கப்படும் வலையமைப்பு உபகரணங்கள், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியாக இந்திய சந்தைக்குள் நுழைவது குறித்து நிறுவனங்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு, அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தொலைத்தொடா்புத் துறை உபகரணங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதில் பல்வேறு புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி, உற்பத்திக்கு உகந்த சூழலை உருவாக்குதல் உள்பட 4 பிரத்யேக பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அண்டை நாடுகளில் இருந்து தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதியை தீவிரமாக கண்காணிப்பதற்கான வழிமுறையை விரைவில் உருவாக்கவும் முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்தில் தகுதி பெற்ற நிறுவனங்கள், தங்களது ஏற்றுமதியை தொடங்கும் கட்டத்தை நெருங்கிவிட்டன. எனவே, இத்துறையில் ஏற்றுமதி நாடாக இந்தியா விரைவில் மாறும் என்றாா் அவா்.

தொலைத்தொடா்புத் துறையில், உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் ரூ.2.45 லட்சம் கோடி கூடுதல் வருமானம் ஈட்டப்படும்; 44,000 கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசு எதிா்பாா்ப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT