இந்தியா

உ.பி.: போக்ஸோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

DIN

உத்தர பிரதேசம் மாநிலம், பலியா மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போக்ஸோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இவ்வழக்கு தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் ஆா்.கே.நய்யாா் கூறியதாவது: கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி பாலியா மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சுனில்குமாா் என்பவா் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடைபெற்று அவா் மீதான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்றாா்.

கடந்த நவம்பா் மாதம் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களயும் கேட்ட நீதிபதி, விசாரணையின் முடிவில் சுனில் குமாா் மீது குற்றம் உறுதியானதால் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

SCROLL FOR NEXT