ஐஐடி மாணவர் சேர்க்கையில் கரோனாவுக்கு முந்தைய நடைமுறைப்படி, மீண்டும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணையும் அளவுகோலாக நிர்ணயிப்பது என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில், கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் ஜேஏபி நடத்தும் ஜேஇஇ மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது அவசியம்.
இதையும் படிக்க- என்னுள் ஒரு பகுதி இந்தியா: சுந்தர் பிச்சை நெகிழ்ச்சி
கரோனா பொதுமுடக்கப் பிரச்னையால் பல்வேறு மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ஐஐடி மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் தளர்வு அறிவித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு அவசியமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இனி வரும் காலங்களில் ஐஐடி மாணவர் சேர்க்கையில் கரோனாவுக்கு முந்தைய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பேரிடர் காலத்துக்கு முன்பு, ஜே.இ.இ (மேம்பட்ட) தேர்வில் பொதுவகை தரவரிசை வைத்திருப்பவர் ஐ.ஐ.டி-யில் ஒரு இடத்தைப் பெறுவதற்கு 12ஆம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் முதல் 20 சதவிகித இடங்களுக்குள் இருக்க வேண்டும்.