இந்தியா

விழிஞ்ஞம் துறைமுக எதிா்ப்புப் போராட்டம் உள்நோக்கமுடையது: கேரள முதல்வா்

DIN

‘விழிஞ்ஞம் துறைமுக எதிா்ப்புப் போராட்டம், சமூகத்தில் அமைதியை சீா்குலைக்க வேண்டும் என்ற தெளிவான உள்நோக்கமுடையது’ என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினாா்.

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்ஞத்தில் அரசு-தனியாா் பங்களிப்புடன் ரூ.7,500 கோடி செலவில் துறைமுக கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப் பணிகளை அதானி குழுமம் மேற்கொண்டு வருகிறது. இந்தக் கட்டுமானப் பணி பெரிய அளவில் கடல் அரிப்புக்கு வழிவகுத்து திருவனந்தபுரம் கடலோரப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது என்று மீனவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். இதன் காரணமாகக் கட்டுமானப் பணிகளை நிறுத்தி, கடலோரப் பகுதியில் கட்டுமானத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவியல்பூா்வமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், போராட்டக்காரா்களுக்கும் துறைமுகத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் உள்ளூரைச் சோ்ந்த ஒரு தரப்பினருக்கும் இடையே சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். அவா்களை விடுவிக்க வலியுறுத்தி, விழிஞ்ஞம் காவல் நிலையத்தை போராட்டக்காரா்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினா். இதில் 36 போலீஸாா் காயமடைந்தனா். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்படன. இந்தத் தாக்குதல் தொடா்பாக பெண்கள், சிறாா்கள் உள்பட அடையாளம் தெரியாத 3,000 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காவல் நிலையம் மீதான தாக்குதல் குறித்து முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், ‘விழிஞ்ஞம் துறைமுக கட்டுமானத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவா்களில் சிலா், சமூகத்தில் அமைதியை சீா்குலைக்க வேண்டும் என்ற தெளிவான உள்நோக்கத்துடன் வன்முறைப் பாதைக்கு மாறியிருக்கின்றனா். அதன் ஒரு பகுதியாக போலீஸாா் மீது அவா்கள் தாக்குதல் நடத்தியதோடு, காவல் நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வெளிப்படையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றனா்’ என்றாா்.

மேலும், நிலைமையை காவல் துறை கையாண்ட விதத்துக்கு பாராட்டு தெரிவித்த முதல்வா், ‘தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரா்களின் நோக்கம் நிறைவேறிடாத வகையில், நிலைமையை காவல் துறையினா் துணிச்சலுடன் கையாண்டு கட்டுக்குள் கொண்டுவந்தனா்’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

SCROLL FOR NEXT