இந்தியா

இந்தப் பாடல்களை ஒலிபரப்பாதீர்கள், வானொலி நிலையங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

DIN

ஆல்கஹால், போதைப் பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் போன்றவற்றை மிகைப்படுத்தி வானொலி நிலையங்கள் பாடல் ஒலிபரப்பக் கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு ஒன்றினை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வானொலி நிலையங்கள் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின்படி கண்டிப்பாக செயல்பட வேண்டும். இந்த ஒப்பந்தங்களின்படி வன்முறை இடம்பெறும் எந்த ஒரு விஷயத்தையும் வானொலியில் ஒலிபரப்பக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் அந்த வானொலி நிலையங்கள் சட்டரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனக் கூறப்பட்டுள்ளது.

வானொலி நிலையங்களில் ஆல்கஹால், போதைப் பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் போன்றவற்றை மிகைப்படுத்தி பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டதையடுத்து இந்த எச்சரிக்கையினை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT