இந்தியாவின் வளர்ச்சியை விரும்புபவர்கள், 'மேக் இந்தியா நம்பா் 1' இயக்கத்தில் சேர 9510001000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று காணொலி வாயிலாக பேசிய தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால்,
'நான் இன்று ஒரு எண்ணை வெளியிடுகிறேன். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல, உலகத்தில் முதலிடத்தில் சக்திவாய்ந்த நாடாக மாற்ற விரும்புபவர்கள் இந்த இயக்கப் பணியில் சேர வேண்டும். இதற்காக நீங்கள் 9510001000 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியாவை உலகின் முதல் நாடாக மாற்றுவதற்கான ‘இந்தியாவை முதலிடத்திற்கு உருவாக்குவோம்’ (மேக் இந்தியா நம்பா் 1) எனும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அளவிலான லட்சிய பிரசார பணித்திட்டத்தை முதல்வரும், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தில்லியில் புதன்கிழமை தொடங்கினாா்.
மேலும், அனைத்து குடிமக்களும், அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தில் சேருமாறு அவா் அழைப்பு விடுத்தாா். பொதுமக்களும் இந்த தேசியப் பணியில் சேர வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிக்க | இந்தியாவை முதல் நாடாக உருவாக்கும் பிரசார பணித்திட்டம் தில்லியில் தொடங்கினாா்முதல்வா் கேஜரிவால்