இந்தியா

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் சென்ற ஹெலிகாப்டர் அவரசமாக தரையிறக்கம்

DIN

பிகார் முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிகாரில் 7-வது முறை முதல்வராக பதவியேற்றுக்கொண்ட நிதீஷ் குமார் அம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலவரம் குறித்து அறிவதற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், திடீரென உருவான மோசமான வானிலை காரணமாக அவசரமாக ஹெலிகாப்டர் கயா மாவட்டதில் தரையிறக்கப்பட்டது.

இதனால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், வானிலை சீரான பின் ஹெலிகாப்டர் மீண்டும் இயக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT