வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு (என்ஆா்ஐ) வாக்குரிமை அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசும் தோ்தல் ஆணையமும் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கும் வாக்குரிமை கோரி, கேரள வெளிநாடு வாழ் இந்தியா்கள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, ஹிமா கோலி ஆகியோா் கொண்ட அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தோ்தல் ஆணையமும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டதுடன், இதே விவகாரத்தில் ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் சோ்த்து இந்த வழக்கையும் விசாரணைக்கு பட்டியலிட்டனா்.