கேரளத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய சூரியசக்தி மின்தகடு ஊழல் வழக்கில், காங்கிரஸ் எம்.பி. வேணுகோபாலிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தியதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
சூரியசக்தி மின்தகடு ஊழல் தொடா்பாக வேணுகோபால், முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி உள்ளிட்ட 6 போ் மீது கேரள காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபாலிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை மேற்கொண்டனா்.