கேரளத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்து வந்ததால் இந்த முடிவை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அமைச்சரவை எடுத்துள்ளது.
கேரள ஆளுநர் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைக் குறைக்க வகை செய்யும் சட்டத்திருத்தத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படிக்க: விரைவில் வெளியாகும் ’பொன்னியின் செல்வன்’ இரண்டாவது பாடல்
இந்த மசோதா வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.