விசாகப்பட்டினம்: ஆந்திரத்தில் அடுத்தடுத்து 3 கொலைகள் என தொடர் கொலையில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி, ஆந்திர மாநிலம் அனகபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பாபு என்று தெரிய வந்துள்ளது.
ராம்பாபு, தொடர்ச்சியாக பெண்களை கொலை செய்து வருவதும், அவரது மனைவி, வேறொரு நபருடன் சேர்ந்து கொண்டு அவரை ஏமாற்றியதும், அவரது முதலாளியும் அவரை ஏமாற்றியதால் மனபிறழ்வு ஏற்பட்டு, இவ்வாறு தொடர் கொலையில் ஈடுபடுவதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், அவரது மனநிலையும் சரியாக இல்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இவர் ஒரு பெண் மற்றும் தம்பதியை கொலை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.