சுதந்திர நாளையொட்டி உணவகங்களில் மூவர்ணங்களில் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் சுதந்திர நாள் (ஆக. 15) இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, சுதந்திர நாளையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்.
பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் காலை தேசியக் கொடியை ஏற்றி பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள், பொது இடங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்டவை மூவர்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில் உணவகங்களிலும் இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை நிறங்களில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இட்லி, மதிய உணவு போன்றவை மூவர்ணங்களில் தட்டுக்களில் பரிமாறப்படுவது, வாடிக்கையாளர்கள், குழந்தைகள் என பலரையும் கவந்துள்ளது.
உணவகங்களில் மூவர்ணங்களில் உணவு உண்ட வாடிக்கையாளர்கள் தங்களது சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.