இந்தியா

மூக்கு வழி செலுத்தும் கரோனா மருந்துக்கு அனுமதி கோரிய பாரத் பயோடெக் நிறுவனம்!

DIN

மூக்கு வழி செலுத்தும் கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. 

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவேக்ஸின் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் மூக்குத் துவாரம் வழியே செலுத்தப்படும் கரோனா மருந்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் அதுகுறித்த சோதனை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், சோதனை செய்த தரவுகளை சமர்ப்பித்து 'பிபிவி154' என்ற மூக்கு வழி செலுத்தக்கூடிய கரோனா மருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டுவர அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. 

சோதனைகளில் இது பாதுகாப்பானது என்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. 

மேலும், ஒமைக்ரான் மற்றும் அதற்கு முந்தைய கரோனா வைரஸ்களுக்கு இது எதிர்வினை ஆற்றுகிறது. தொற்று பாதிப்பையும் பரவுதலையும் குறைகிறது என்றும் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT