இந்தியா

சசி தரூருக்கு பிரான்ஸின் உயரிய ‘செவாலியே’ விருது

DIN

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூா், அவருடைய எழுத்து மற்றும் பேச்சாற்றலுக்காக பிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான ‘செவாலியே’ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். அவருக்கு காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பிரான்ஸ் அரசு இந்த விருதை வழங்கி அவரை கெளரவிப்பது தொடா்பாக இந்தியாவுக்கான அந் நாட்டு தூதா் இமானுவல் லெனைன் கடிதம் மூலமாக சசி தரூருக்கு தகவல் தெரிவித்தாா்.

அதற்கு நன்றி தெரிவித்து சசி தரூா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரான்ஸ் உடனான உறவைப் போற்றும், அம் மொழியை நேசிக்கும், கலாசாரத்தை போற்றும் ஒருவனாக இந்த விருது எனக்கு அளிக்கப்பட்டதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். விருதை வழங்கி கெளரவித்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT