இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பெண்கள் உயிருடன் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஷீல் கிராம பஞ்சாயத்தில் உள்ள காமேல் கிராமத்தில் இன்று காலை 9 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் வீடு இடிந்து விழுந்ததில், வீட்டுக்குள் இருந்த 2 பெண்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருடன் புதைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் சுதேஷ் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் சாவேலு தேவி (55) மற்றும் கிருத்திகா (17) என அடையாளம் காணப்பட்டனர். மேலும், அப்பகுதியில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.