இந்தியா

‘நன்றி அண்ணா’: முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துக்கு தேஜஸ்வி யாதவ் நன்றி

DIN

துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவிற்கு தேஜஸ்வி யாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.

பிகாரில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் நிதீஷ் குமார் ஆட்சிமைத்துள்ளார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுள்ளார். அவருக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவ்விற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சுட்டுரை பதிவை பகிர்ந்துள்ள தேஜஸ்வி யாதவ், “நன்றி அண்ணா. நாம் இணைந்து எதேச்சதிகார அரசுக்கு எதிராக போராடுவோம். அதற்கான பணி இன்று தொடங்கியுள்ளது. நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண நாள் கொண்டாட்டத்தில் அஜித் - ஷாலினி!

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

கோட்டக் மஹிந்திரா வங்கியின் முக்கிய சேவைகளுக்கு ஆர்பிஐ தடை!

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

SCROLL FOR NEXT