இந்தியா

13 மணிநேரம் எண்ணப்பட்ட பணம்: வருமான வரித்துறை பறிமுதல்

DIN

தொழிலதிபர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர், 13 மணிநேரமாக எண்ணியுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் துணி வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் ஆகஸ்ட் 1 முதல் 8ஆம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், ரூ. 56 கோடி பணம், 32 கிலோ எடையிலான தங்கம், வைர நகைகள் மற்றும் ஆவணங்கள் என மொத்தம் ரூ. 100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்தனர்.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை இயந்திரங்களை கொண்டு கணக்கிடுவதற்கு 13 மணிநேரம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சொத்துகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்த்த பிறகு கணக்கில் வராத சொத்துகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT