இந்தியா

மாடுகள் கடத்தல் வழக்கு: மம்தாவின் நெருங்கிய உதவியாளர் அனுப்ரதா கைது

DIN

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் நெருங்கிய உதவியாளருமான அனுப்ரதா மோண்டலை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

மாடுகள் கடத்தல் வழக்கில், கடந்த மூன்று நாள்களாக விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை இன்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிர்பம் மாவட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பாகுபலி என்று கூறப்படுபவருமான அனுப்ரதா மோண்டல் இல்லாமல் பிம்பம் பகுதியில் அணுவும் அசையாது என்பது தொண்டர்களின் வாக்கு.

இவர் ஹைபோக்ஸியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். எப்போதும் ஆக்ஸிஜனுடன்தான் நடமாடுவார்.

பல சர்ச்சைகளுக்கு ஆளான இவர் மீது பல குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. ஏற்கனவே, தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறை குறித்து சிபிஐ அதிகாரிகள் அனுப்பிரதாவிடம் விசாரணை நடத்திய நிலையில் தற்போது மாடுகள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT